3ம் பங்குனித்திங்கள் விழா

3ம் பங்குனித்திங்கள் விழா நேற்று வெகுசிறப்பாக இடம்பெற்றது. குடாநாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் அம்பாளுக்கு பொங்கலிட்டும் கரற்பூரசட்டி ,காவடி எடுத்தும், அர்சனைசெயதும் ,அங்கபிரதிஷ்டை செய்தும் வழிபட்டுசென்றதை காணமுடிந்தது. ஆலயத்தின் நான்குபுறங்களிலும் பல நூற்றுக்கணக்கானபொங்கல்கள் அதிகாலை முதலே இடம்பெற்றுவந்ததை அவதானிக்க முடிந்தது.

திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

Continue reading “3ம் பங்குனித்திங்கள் விழா”

கண்ணகாம்பிகை அன்னசத்திரம் திறப்பு விழா

‘கண்ணகாம்பிகை அன்னசத்திரம்‘  மண்டப திறப்புவிழா  வைபவரீதியாக 30-03-2015  திங்கள்கிழமை முற்பகல்11.00மணியளவில் தர்மகர்த்தா தலைமையில் இடம்பெற்றது. பிரதமவிருந்தினராககலந்துகொண்ட ரூபினிவரதலிங்கம் (மேலதிகஅரசஅதிபர் ),சிறப்பு விருந்தினர் பொ.சந்திரசேகரம் (விரிவுரையாளர்  யாழ் பல்கலைகழகம் )ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டு நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்துவைக்கபட்டது .

DSC05508

படத்தின்மேல் ‘கிளிக்’ செய்வதன் மூலம் முழு அளவில் பார்வையிடமுடியும் .

முந்திய  செய்தி

அம்பாள் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ‘கண்ணகாம்பிகை அன்னசத்திரம்‘  மண்டபம் வைபவரீதியாக 30-03-2015  திங்கள்கிழமை முற்பகல்11.00மணிக்கு திறந்து வைக்கபட்டுநினைவுக் கல்லும் திரைநீக்கம்செய்துவைக்கபடுகிறது.

இம்மண்டபம் அமரர். வைரமுத்து இராசசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக  துணைவியார்   திருமதி -அன்னலட்சுமி இராசசிங்கம் அவர்களால் அமைக்கப்பட்டது.

 

2ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா

2ம் பங்குனித்திங்கள்விழா சிறப்பாக இடம்பெற்றது குடாநாட்டின் பலபாகங்களிலிருந்தும் வருகைதந்த பக்தர்கள் புனிததீர்த்தத்தில் நீராடி பொங்கலிட்டு வழிபட்டுசென்றனர். அதிகாலை 4.00 மணிமுதலே பக்தர்கள் வருகைதந்தவண்ணம் இருந்ததை காணமுடிந்தது . பகல்திருவிழா அம்பாள் இடபவாகனத்திலும் மாலை திருவிழா மகரவாகனத்திலும் எழுந்தருளி அருட்காட்சியளித்தார் .DSC05377