வைகாசி விசாகப்பொங்கல் 2017

வைகாசி விசாகப்பொங்கல் விழா புதன்கிழமை 06-07-2017 காலை9.00 மணிக்கு சங்காபிஷேகம் ,விஷேட பூஜை என்பன இடம்பெற்றது . மாலை 5.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று அம்பாள் திருவீதியுலாவந்தருட்காட்சி வழங்கினர் .தொடர்ந்து பொங்கல் வைபவம் இடம்பெற்று இரவு 8.00 மணிக்கு விஷேட பூஜை இடம்பெற்றது .

முக்கிய குறிப்பு அடியவர்கள் கவனத்தில் கொள்ளவும் !!!

 

  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

 

நான்காம் பங்குனித்திங்கள் உற்சவம்

நான்காம் பன்குனித்திங்கள் விழா சிறப்பாக இடம்பெற்றது அதிகாலை3.00 முதல் இரவு 10.00வரை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்பாளுக்கு பொங்கலிட்டும் நேர்த்திகளை நிறைவேற்றியும் வழிபட்டு சென்றனர் . ஆயிரத்துக்கு மேற்பட்ட பொங்கல்கள், நுட்ருக்கு மேற்பட்ட காவடிகள் ,பாற்செம்பு கர்பூரசட்டிகள் ,கண்பானை போன்ற நேர்த்திகள் நிறைவேற்றினர் .