Archive for the ‘நிழற்படங்கள்’ Category

திருப்பணி -முன்பக்க மதில்

  1. 27-02-2016  வெளியிடப்பட்டசெய்தி  அம்பாள ஆலய வாசலின் தெற்கு  பக்கமதில் வேலைகள் தை மாதம் அத்திபாரமிடப்பட்டு  வேலைகள் நடைபெற்றுவருகின்றது இவ் மதிலும் வடக்கு பக்கமாக அமைக்கபட்டுவரும் மதில் போலவே  சிற்பவரிவேலைப்பாடுடையதாக அமைக்கப்படவுள்ளது .    இத்திருப்பணிக்கு அடியவர்கள்  நிதி, கட்டிட பொருட்கள் [சீமெந்து ,கருங்கல்சல்லி மணல் ,கம்பி ] ஆகியவற்றைக் வழங்க  விரும்பினால் ஆலய அலுவலகத்தில் மட்டும்  செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
    Read the rest of this entry »

5ம் பங்குனித்திங்கள் விழா

5ம் பங்குனித்திங்கள் விழா மிக சிறப்பாக இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாளை வழிபடுவதற்காக ஆலயத்தில் கூடியிருந்தனர் புனிததீர்த்தத்தில் நீராடி பொங்கலிட்டு படைத்து அம்பாளை மனமுருகி வேண்டி வழிபட்டு சென்றனர் .

திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

Read the rest of this entry »

4ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா

4ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா நேற்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் அம்பாளை தரிசிப்பதற்காக ஆலயவளாகத்திலேகூடி பொங்கலிட்டும் நேர்த்திகளை நிறைவேற்றியும் அம்பாளை வழிபட்டு சென்றனர் .அடியவர்களின் தாக சாந்தியை தீர்க்கும்முகமாக ஆலய சுற்றாடலிலும் வரும்வீதி களிலும் பத்துக்கு மேற்பட்ட தாக சாந்தி நிலையங்கள் திறக்கப்பட்டிருந்ததுடன் ஆலயத்தின் கிழக்கு,தெற்கு ,மேற்கு பக்கங்களில் உள்ள அன்னதான மடங்களில் அன்னதானமும் வழங்கபட்டது .

திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

Read the rest of this entry »

3ம் பங்குனித்திங்கள் விழா

3ம் பங்குனித்திங்கள் விழா நேற்று வெகுசிறப்பாக இடம்பெற்றது. குடாநாட்டின் பலபகுதிகளில் இருந்தும் வருகைதந்த பக்தர்கள் அம்பாளுக்கு பொங்கலிட்டும் கரற்பூரசட்டி ,காவடி எடுத்தும், அர்சனைசெயதும் ,அங்கபிரதிஷ்டை செய்தும் வழிபட்டுசென்றதை காணமுடிந்தது. ஆலயத்தின் நான்குபுறங்களிலும் பல நூற்றுக்கணக்கானபொங்கல்கள் அதிகாலை முதலே இடம்பெற்றுவந்ததை அவதானிக்க முடிந்தது.

திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

Read the rest of this entry »

கண்ணகாம்பிகை அன்னசத்திரம் திறப்பு விழா

‘கண்ணகாம்பிகை அன்னசத்திரம்‘  மண்டப திறப்புவிழா  வைபவரீதியாக 30-03-2015  திங்கள்கிழமை முற்பகல்11.00மணியளவில் தர்மகர்த்தா தலைமையில் இடம்பெற்றது. பிரதமவிருந்தினராககலந்துகொண்ட ரூபினிவரதலிங்கம் (மேலதிகஅரசஅதிபர் ),சிறப்பு விருந்தினர் பொ.சந்திரசேகரம் (விரிவுரையாளர்  யாழ் பல்கலைகழகம் )ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டு நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்துவைக்கபட்டது .

DSC05508

படத்தின்மேல் ‘கிளிக்’ செய்வதன் மூலம் முழு அளவில் பார்வையிடமுடியும் .

முந்திய  செய்தி

அம்பாள் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ‘கண்ணகாம்பிகை அன்னசத்திரம்‘  மண்டபம் வைபவரீதியாக 30-03-2015  திங்கள்கிழமை முற்பகல்11.00மணிக்கு திறந்து வைக்கபட்டுநினைவுக் கல்லும் திரைநீக்கம்செய்துவைக்கபடுகிறது.

இம்மண்டபம் அமரர். வைரமுத்து இராசசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக  துணைவியார்   திருமதி -அன்னலட்சுமி இராசசிங்கம் அவர்களால் அமைக்கப்பட்டது.

 

2ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா

2ம் பங்குனித்திங்கள்விழா சிறப்பாக இடம்பெற்றது குடாநாட்டின் பலபாகங்களிலிருந்தும் வருகைதந்த பக்தர்கள் புனிததீர்த்தத்தில் நீராடி பொங்கலிட்டு வழிபட்டுசென்றனர். அதிகாலை 4.00 மணிமுதலே பக்தர்கள் வருகைதந்தவண்ணம் இருந்ததை காணமுடிந்தது . பகல்திருவிழா அம்பாள் இடபவாகனத்திலும் மாலை திருவிழா மகரவாகனத்திலும் எழுந்தருளி அருட்காட்சியளித்தார் .DSC05377

ஜய வருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2015

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 16-௦3-2015 அன்று ஆரம்பமாகிறது. பங்குனித்திங்கள் என்றதும் இலங்கை வாழ் சைவமக்கள் மனதில் பன்றித்தலைச்சி  அம்மன் கோவிலும் அங்கு இடம்பெறும் பெருமளவான பொங்கலும் தான் நினைவிட்குவரும் என்று கூறுவார்கள் .இத்தகைய சிறப்புமிக்க அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் காலத்தில்  பக்தர்கள் சர்வரோக நிவாரணியாக விளங்கும் புனித தீர்த்தத்தில் நீராடி பூஜை,அபிஷேக ஆராதனைகளினை வழிபட்டும்,பொங்கலிட்டும் அவற்றினை தாமே அம்பாளுக்கு படையலிட்டு வழிபட்டும் ,கற்பூரச்சட்டி ,கண்பானை, பாற்செம்பு, காவடி எடுத்தும்,அங்கபிரதட்ஷனம் செய்தும்,விரதமிருந்தும் தமது நேர்த்திகளை பரிபூரணமாக நிறைவேற்றி அம்பாளை வேண்டி வழிபட்டு செல்வர் . இவ்வாறானதொரு நீண்ட வழிபாட்டு பாரம்பரியம் கொண்ட அம்பாள் ஆலயத்தில் ஜய வருஷ பங்குனித்திங்கள் உற்சவம் பின்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளது.

பங்குனி2  [16.03.2015] முதலாம் பங்குனித்திங்கள்

பங்குனி9  [23.03.2015 ]இரண்டாம் பங்குனித்திங்கள்

பங்குனி16 [30.03.2015]மூன்றாம் பங்குனித்திங்கள்

பங்குனி23 [06.04.2015]நான்காம் பங்குனித்திங்கள்

பங்குனி30 [13.04.2015] ஐந்தாம் பங்குனித்திங்கள்

பங்குனித்திங்கள் உற்சவமானது ஆறுகால பூஜைகளுடன் காலை, மாலை அபிஷேகம் அம்பாள் திருவீதியுலா என்பனவற்றுடன் பக்தி பூர்வமாக இடம்பெறும். 

பக்தர்கள் காலை 5.00 மணிமுதல்  இரவு 8.00 மணிவரை பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் .

அம்பாள் ஆலயத்தில் பூஜைகளும் உற்ஷவங்களும் திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.இதன்பொருட்டு நிதி,பொருள் சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.எனவே அடியவர்கள் ஆலய அலுவலகத்தில் மட்டும் கையளித்து பற்றுசீட்டினைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்.

1ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 16-௦3-2015 அன்று  1ம் பங்குனித்திங்கள் விழா சிறப்பாக இடம்பெற்றது . அதிகாலை 4.00  மணிமுதலே பக்தர்கள் வருகைதந்து ஆலய தீர்த்தகேணியில் நீராடி அம்பாளை வழிபட்டும் பொங்கலிட்டு வழிபட்டு சென்றதை காண முடிந்தது.

  காலைத்திருவிழா  8.30  மணிக்கு அபிசேகத்துடன்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெற்று அம்பாள் உள்வீதி ,இரண்டாம்வீதி வீதியுலாவந்து அருள்காட்சி வழங்கினார்.  

மாலை 5.30  மணிக்கு அபிசேகத்துடன்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெற்று அம்பாள் உள்வீதி ,மூன்றாம் வீதி(வெளிவீதி ), வீதியுலாவந்து அருள்காட்சி வழங்கினார் .

தர்மகர்த்தா .

நிர்வாகம்

யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் வீற்றிருந்து சர்வலோகமும் தன்அருளை வழங்கிக் கொண்டிருக்கும் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயம் தொடர்பான  விடயங்களை ஆலய நிர்வாகம் இவ் இணையத்தளம் ஊடாக உலகமெல்லாம் பரந்து வாழும் அம்பாள் அடியவர்களுக்கு அறியப்படுத்துகிறது.

இவ் இணையத்தளம் ஊடாக அடியார்கள் அம்பாள் ஆலயத்தி்ன் வரலாறு பூஜைகள் உற்சவங்கள் திருப்பணிகள் என்பவற்றை அறியமுடியும் இத்தளம் நிர்வாகத்தி்ன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றது.

  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை. DSC07357


?>