Archive for the ‘அறிவித்தல்’ Category

நவராத்திரிவிழா-2015

13-10-2015 புரட்டாசி25   ம்நாள் செவ்வாய்கிழமைநவராத்திரிவிழா ஆரம்பமாகியது  தொடர்ந்து ஒன்பது தினங்கள் இடம்பெறும்.

தினமும் காலை 9.30 மணிக்கு அபிஷேகம்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேடபூஜை,வசந்தமண்டபபூஜை என்பன இடம்பெறும். Read the rest of this entry »

திருப்பணி -முன்பக்க மதில்

  1. 27-02-2016  வெளியிடப்பட்டசெய்தி  அம்பாள ஆலய வாசலின் தெற்கு  பக்கமதில் வேலைகள் தை மாதம் அத்திபாரமிடப்பட்டு  வேலைகள் நடைபெற்றுவருகின்றது இவ் மதிலும் வடக்கு பக்கமாக அமைக்கபட்டுவரும் மதில் போலவே  சிற்பவரிவேலைப்பாடுடையதாக அமைக்கப்படவுள்ளது .    இத்திருப்பணிக்கு அடியவர்கள்  நிதி, கட்டிட பொருட்கள் [சீமெந்து ,கருங்கல்சல்லி மணல் ,கம்பி ] ஆகியவற்றைக் வழங்க  விரும்பினால் ஆலய அலுவலகத்தில் மட்டும்  செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
    Read the rest of this entry »

கண்ணகாம்பிகை அன்னசத்திரம் திறப்பு விழா

‘கண்ணகாம்பிகை அன்னசத்திரம்‘  மண்டப திறப்புவிழா  வைபவரீதியாக 30-03-2015  திங்கள்கிழமை முற்பகல்11.00மணியளவில் தர்மகர்த்தா தலைமையில் இடம்பெற்றது. பிரதமவிருந்தினராககலந்துகொண்ட ரூபினிவரதலிங்கம் (மேலதிகஅரசஅதிபர் ),சிறப்பு விருந்தினர் பொ.சந்திரசேகரம் (விரிவுரையாளர்  யாழ் பல்கலைகழகம் )ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டு நினைவுக்கல்லும் திரைநீக்கம் செய்துவைக்கபட்டது .

DSC05508

படத்தின்மேல் ‘கிளிக்’ செய்வதன் மூலம் முழு அளவில் பார்வையிடமுடியும் .

முந்திய  செய்தி

அம்பாள் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த ‘கண்ணகாம்பிகை அன்னசத்திரம்‘  மண்டபம் வைபவரீதியாக 30-03-2015  திங்கள்கிழமை முற்பகல்11.00மணிக்கு திறந்து வைக்கபட்டுநினைவுக் கல்லும் திரைநீக்கம்செய்துவைக்கபடுகிறது.

இம்மண்டபம் அமரர். வைரமுத்து இராசசிங்கம் அவர்களின் ஞாபகார்த்தமாக  துணைவியார்   திருமதி -அன்னலட்சுமி இராசசிங்கம் அவர்களால் அமைக்கப்பட்டது.

 

ஜய வருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2015

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 16-௦3-2015 அன்று ஆரம்பமாகிறது. பங்குனித்திங்கள் என்றதும் இலங்கை வாழ் சைவமக்கள் மனதில் பன்றித்தலைச்சி  அம்மன் கோவிலும் அங்கு இடம்பெறும் பெருமளவான பொங்கலும் தான் நினைவிட்குவரும் என்று கூறுவார்கள் .இத்தகைய சிறப்புமிக்க அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் காலத்தில்  பக்தர்கள் சர்வரோக நிவாரணியாக விளங்கும் புனித தீர்த்தத்தில் நீராடி பூஜை,அபிஷேக ஆராதனைகளினை வழிபட்டும்,பொங்கலிட்டும் அவற்றினை தாமே அம்பாளுக்கு படையலிட்டு வழிபட்டும் ,கற்பூரச்சட்டி ,கண்பானை, பாற்செம்பு, காவடி எடுத்தும்,அங்கபிரதட்ஷனம் செய்தும்,விரதமிருந்தும் தமது நேர்த்திகளை பரிபூரணமாக நிறைவேற்றி அம்பாளை வேண்டி வழிபட்டு செல்வர் . இவ்வாறானதொரு நீண்ட வழிபாட்டு பாரம்பரியம் கொண்ட அம்பாள் ஆலயத்தில் ஜய வருஷ பங்குனித்திங்கள் உற்சவம் பின்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளது.

பங்குனி2  [16.03.2015] முதலாம் பங்குனித்திங்கள்

பங்குனி9  [23.03.2015 ]இரண்டாம் பங்குனித்திங்கள்

பங்குனி16 [30.03.2015]மூன்றாம் பங்குனித்திங்கள்

பங்குனி23 [06.04.2015]நான்காம் பங்குனித்திங்கள்

பங்குனி30 [13.04.2015] ஐந்தாம் பங்குனித்திங்கள்

பங்குனித்திங்கள் உற்சவமானது ஆறுகால பூஜைகளுடன் காலை, மாலை அபிஷேகம் அம்பாள் திருவீதியுலா என்பனவற்றுடன் பக்தி பூர்வமாக இடம்பெறும். 

பக்தர்கள் காலை 5.00 மணிமுதல்  இரவு 8.00 மணிவரை பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் .

அம்பாள் ஆலயத்தில் பூஜைகளும் உற்ஷவங்களும் திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.இதன்பொருட்டு நிதி,பொருள் சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.எனவே அடியவர்கள் ஆலய அலுவலகத்தில் மட்டும் கையளித்து பற்றுசீட்டினைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்.

1ம் பங்குனித்திங்கள் பொங்கல் விழா

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 16-௦3-2015 அன்று  1ம் பங்குனித்திங்கள் விழா சிறப்பாக இடம்பெற்றது . அதிகாலை 4.00  மணிமுதலே பக்தர்கள் வருகைதந்து ஆலய தீர்த்தகேணியில் நீராடி அம்பாளை வழிபட்டும் பொங்கலிட்டு வழிபட்டு சென்றதை காண முடிந்தது.

  காலைத்திருவிழா  8.30  மணிக்கு அபிசேகத்துடன்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெற்று அம்பாள் உள்வீதி ,இரண்டாம்வீதி வீதியுலாவந்து அருள்காட்சி வழங்கினார்.  

மாலை 5.30  மணிக்கு அபிசேகத்துடன்  ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட பூஜை இடம்பெற்று அம்பாள் உள்வீதி ,மூன்றாம் வீதி(வெளிவீதி ), வீதியுலாவந்து அருள்காட்சி வழங்கினார் .

தர்மகர்த்தா .

ஜய வருஷ மகோற்சவவிஞ்ஞாபனம் 27.12.2014 – 05.01.2015

வரலாற்று சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித்தலைச்சிஅம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஜய வருஷம் மார்கழி மாதம் 12 ம் நாள் 27-12-2014  சனிக்கிழமைகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறுகிறது மார்கழி மாதம் 20ம் நாள் 04-01-2015 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள்  மார்கழி 21 ம் நாள் திருவாதிரை 05-01-2015 திங்கள்கிழமை அன்று தீர்த்தம் இடம்பெற்று  மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைகிறது . அம்பாள் அடியவர்கள் உட்சவகாலங்களில் ஆசாரசீலராக வருகைதந்து உற்சவங்களில் பங்குபற்றி அம்பாளின் அருளை பெற்றுய்வீர்களாக .

உற்சவகால விபரம்

கொடியேற்றம் – 27-12-2014 சனிக்கிழமை  காலை 7.00 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட கிரியைகள் இடம்பெற்று 11.00 மணிக்குகொடியேற்றம் இடம்பெறும் . மாலை யாகாரம்பம் 4.00 மணி.

தேர்த்திருவிழா  04-01-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட கிரியைகள் இடம்பெற்று 10.15 மணியளவில் அம்பாள் தேரில் ஆரோகணித்து அருட்காட்சியளிப்பார்.

தீர்த்ததிருவிழா 05-01-2015 திங்கள்கிழமை காலை  7.00 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட கிரியைகள் இடம்பெற்று 10.00 மணியளவில் ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தமாடி அருள்புரிவார் .

ஏனைய நாட்களில் காலைதிருவிழா 9.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்

மாலைதிருவிழா  5.00 மணிக்கு  அபிஷேகத்துடன் ஆரம்பமாகும்.



  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

 

 

DSC04994 copy

தீர்த்தஉத்சவம்

கொடியேற்றத்திருவிழாவின் பத்தாம்நாளன 05-01-2015  திங்கள்கிழமை காலை  ஆலய புனிததீர்த்தகேணியில் தீர்த்தஉத்சவம் இடம்பெற்றது. மாலை திருவூஞ்சல்,கொடியிறக்கம் ,அம்பாள் திருவீதியுலா,சண்டேஸ்வரஉத்சவம் ,ஆச்சாரியஉத்சவம் என்பன இடம்பெற்றது.

படத்தின் மேல் அழுத்தவும் (கிளிக்)செய்வதன் மூலம் படங்களை முழுஅளவில் பார்வையிடலாம்

 

தேர்த்திருவிழா 04-01-2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

 

 

 

8ம் திருவிழா

பகல் மகரவாகனம் மதியம் வேட்டைத்திருவிழா இரவு சப்பரம்

 

6ம்,7ம் திருவிழா காட்சிகள்.

 

no images were found

 02-01-2015  வெள்ளிக்கிழமை புனரமைக்கபட்ட 

தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது

அம்பாள் ஆலய தேர் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த போதும் மேல்பகுதி நிறைவு செய்யப்படவில்லை இவ்வருடம் அவ்வேலைகள் நிறைவு செய்யப்பட்டு ,திருத்த வேலைகள் செய்து புனருத்தாரண வெள்ளோட்டம்விடப்பட்டது .

DSC04757 copy

 

5ம்திருவிழா திருமஞச திருவிழா

no images were found

 

2ம்,3ம்,4ம் திருவிழாக்கள்

கொடியேற்றம் – 27-12-2014 சனிக்கிழமைஇடம்பெற்றது

 

 

no images were found

 

திருப்பணி – அன்னதான மண்டபம்

யாழ்பாணத்தின் பிரசித்தி பெற்ற பொங்கல்தலமாக விளங்குகின்ற அம்பாள் ஆலயத்தில் தனவந்தர்களாலும், தருமகொடையாளர்களாலும் அன்னதானமண்டபங்களும் நீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டு தாகசாந்தி நிலையங்களாக செயட்பட்டு வந்தமை யாவரும் அறிந்ததே அவை 2000 ம்ஆண்டு இடம்பெற்ற யுத்தனர்த்தம் காரணமாக சேதமடைந்தும் ,முற்றாக அழிவடைந்தும் போயுள்ளது தற்போது ஒரு சில மண்டபங்களே இயங்கி வருகிறது எனினும் அவை போதுமானதாக காணப்படவில்லை.எனவே அக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு புதிய அன்னதான மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கான நிதியுதவியினை அம்பாள் அடியவர் ஒருவர் வழங்க ஆலய நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மண்டபம் 135 அடி நீளமும் 30அடி அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை.DSC04463 copy DSC04476 copy 10642850_445003238972758_1079181390_o

?>