மன்மதவருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2016

வரலாற்று சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் பெருவிழா 14-௦3-2016 அன்று ஆரம்பமாகிறது.   பங்குனித்திங்கள் என்றதும் இலங்கை வாழ் சைவமக்கள் மனதில் பன்றித்தலைச்சி  அம்மன் கோவிலும் அங்கு இடம்பெறும் பெருமளவான பொங்கலும் தான் நினைவிட்குவரும் என்று கூறுவார்கள் .இத்தகைய சிறப்புமிக்க அம்பாள் ஆலயத்தில் பங்குனித்திங்கள் காலத்தில்  பக்தர்கள் சர்வரோக நிவாரணியாக விளங்கும் புனித தீர்த்தத்தில் நீராடி பூஜை,அபிஷேக ஆராதனைகளினை வழிபட்டும்,பொங்கலிட்டும் அவற்றினை தாமே அம்பாளுக்கு படையலிட்டு வழிபட்டும் ,கற்பூரச்சட்டி ,கண்பானை, பாற்செம்பு, காவடி எடுத்தும்,அங்கபிரதட்ஷனம் செய்தும்,விரதமிருந்தும் தமது நேர்த்திகளை பரிபூரணமாக நிறைவேற்றி அம்பாளை வேண்டி வழிபட்டு செல்வர் . இவ்வாறானதொரு நீண்ட வழிபாட்டு பாரம்பரியம் கொண்ட அம்பாள் ஆலயத்தில் மன்மதவருஷ பங்குனித்திங்கள் உற்சவம் பின்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளது.  Continue reading “மன்மதவருஷ பங்குனித்திங்கள் உத்சவம் 2016”

தீர்த்தோற்சவம் 2015

26-12-2015 மார்கழி 10ம் நாள் சனிக்கிழமை தீர்த்தோற்சவம் காலை 7.00 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி விஷேடபூசை ,ஸ்தம்பபூசை, வசந்தமண்டப பூசை , என்பன இடம்பெற்று ஆலய தீர்த்தகேணியில் மணியளவில் தீர்த்தோற்சவம்  இடம்பெற்றது . மாலை திருவூஞ்சல் இடம்பெற்று தொடர்ந்து கொடியிறக்கம் சண்டேச்வர் உற்சவம் என்பன இடம்பெற்றது .

DSC07599 copy 

திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

Continue reading “தீர்த்தோற்சவம் 2015”

தேர்த்திருவிழா- 2015

25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இடம்பெற்றது . காலை 7.00மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி 9.00  மணிக்கு வசந்தமண்டப பூசை இடம்பெற்று அம்பாள் 10.30 மணியளவில் தேரில்எழுந்தருளி திருவீதியுலா வந்தருளினார் . அம்பாளுடைய தேர்த்திருவிழாவில் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர் .

.DSC07357 DSC07369

திருவிழாக்களின் புகைப்படங்கள் கீழே இணைத்துள்ளோம்.

Continue reading “தேர்த்திருவிழா- 2015”