மகாகும்பாபிஷேகம் – 2026

12-04-2026 பங்குனி-29 ஞாயிறு காலை 08.06 -10.00 மணி வரையான திருவோண நட்சத்திர நாளில் அம்பாள் ஆலய மகாகும்பாபிஷேகம் இடம்பெற திருவருள்கூடியுள்ளது.

ஆலய திருப்பணிவேலைகள் மற்றும் மகாகும்பாபிஷேக திருப்பணிகளுக்கு பொருளாகவோ அல்லது நிதியாகவோ பங்களிப்பு செய்யவிரும்புவோர் நேரடியாக ஆலய அலுவலகத்தில் மட்டுமே வழங்கி பற்றுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.

எமது ஆலயத்தின் பெயரால் திருப்பணிவேலைகள் மற்றும் மகாகும்பாபிஷேக திருப்பணிகள்,அன்னதானம் என்பவற்றிற்கு நிதியாகவோ பொருளாகவோ சேகரிப்பதற்கு எவருக்கும் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ அனுமதி வழங்கப்படவில்லை.

தொலைபேசி இல : 021 373 5259
www.madduvilpanriththalaichchiamman.com
தர்மகர்த்தா சிவ.பஞ்சாட்சரம்

நிர்வாகம்

யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதியில் வீற்றிருந்து சர்வலோகமும் தன்அருளை வழங்கிக் கொண்டிருக்கும் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்பாள் ஆலயம் தொடர்பான  விடயங்களை ஆலய நிர்வாகம் இவ் இணையத்தளம் ஊடாக உலகமெல்லாம் பரந்து வாழும் அம்பாள் அடியவர்களுக்கு அறியப்படுத்துகிறது.

இவ் இணையத்தளம் ஊடாக அடியார்கள் அம்பாள் ஆலயத்தி்ன் வரலாறு பூஜைகள் உற்சவங்கள் திருப்பணிகள் என்பவற்றை அறியமுடியும் இத்தளம் நிர்வாகத்தி்ன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றது.

  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை. Continue reading “நிர்வாகம்”

விசேட அறிவித்தல்

ஆலய புனரமைப்பு – பாலஸ்தாபனம்

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய  பாலஸ்தாபனம் கடந்த 11-09-2023 திங்கள்கிழமை இடம்பெற்றது. அம்பாள் ஆலயத்தில் கடந்த 2007 ம் ஆண்டு இடம்பெற்ற மகாகும்பாபிசேகத்திற்கு பின்னர் தற்போது அன்னை ஆலயத்தில் பாலஸ்தாபனம் நிகழப்பெற்றுள்ள நிலையில் ஸ்நபன மண்டபம், தம்ப மண்டபம்,வசந்தமண்டபம் உள்ளிட்ட மண்டப அமைப்பு திருப்பணிவேலைகளும் ஏனைய புனரமைப்பு வேலைகளும் நடைபெற்று வருகின்றது .

 

ஆலயத்தின் பெயரால் திருப்பணி / பூசை என எந்தவோரு நிதி, பொருள் சேகரிப்பிற்கும் உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ எவருக்கும் அனுமதிவழங்கபடவில்லை.

அன்னையின் ஆலய திருப்பணிவேலைகளுக்கு பங்களிப்பு செய்ய விரும்புவோர் நேரடியாக ஆலய அலுவலகத்தில் /ஆலய திருப்பணி உண்டியல் என்பவற்றினூடாக மட்டுமே வழங்கமுடியும்.

 

தர்மகர்த்தா
சிவ. பஞ்சாட்சரம்
021 373 5259