ஜய வருஷ மகோற்சவவிஞ்ஞாபனம் 27.12.2014 – 05.01.2015

வரலாற்று சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித்தலைச்சிஅம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஜய வருஷம் மார்கழி மாதம் 12 ம் நாள் 27-12-2014  சனிக்கிழமைகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறுகிறது மார்கழி மாதம் 20ம் நாள் 04-01-2015 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள்  மார்கழி 21 ம் நாள் திருவாதிரை 05-01-2015 திங்கள்கிழமை அன்று தீர்த்தம் இடம்பெற்று  மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைகிறது . அம்பாள் அடியவர்கள் உட்சவகாலங்களில் ஆசாரசீலராக வருகைதந்து உற்சவங்களில் பங்குபற்றி அம்பாளின் அருளை பெற்றுய்வீர்களாக .

உற்சவகால விபரம்

கொடியேற்றம் – 27-12-2014 சனிக்கிழமை  காலை 7.00 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட கிரியைகள் இடம்பெற்று 11.00 மணிக்குகொடியேற்றம் இடம்பெறும் . மாலை யாகாரம்பம் 4.00 மணி.

தேர்த்திருவிழா  04-01-2015 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட கிரியைகள் இடம்பெற்று 10.15 மணியளவில் அம்பாள் தேரில் ஆரோகணித்து அருட்காட்சியளிப்பார்.

தீர்த்ததிருவிழா 05-01-2015 திங்கள்கிழமை காலை  7.00 மணிக்கு அபிசேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து விஷேட கிரியைகள் இடம்பெற்று 10.00 மணியளவில் ஆலய தீர்த்த கேணியில் தீர்த்தமாடி அருள்புரிவார் .

ஏனைய நாட்களில் காலைதிருவிழா 9.00 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்

மாலைதிருவிழா  5.00 மணிக்கு  அபிஷேகத்துடன் ஆரம்பமாகும்.



  • ஆலயத்தில் உற்சவங்களும், திருப்பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுவருகி்ன்றன. அடியார்களாகிய தாங்கள் அம்பாளி்ன் திருப்பணி கைங்கரியங்களுக்காகவோ, உற்சவங்களுக்காகவோ நிதி, பொருள் ஆகியவற்றைக் கையளிக்க விரும்பினால் ஆலய அலுவலகத்தில் செலுத்திப் பற்றுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
  • உள்நாட்டிலோ/ வெளிநாடுகளிலோ உற்சவங்கள்,திருப்பணிகள் போன்றவற்றுக்காக நிதி, பொருள் என்பவற்றை சேகரிப்பதற்கு எவருக்கும் ஆலய நிர்வாகம் அனுமதி  வழங்கவில்லை.

 

 

DSC04994 copy

தீர்த்தஉத்சவம்

கொடியேற்றத்திருவிழாவின் பத்தாம்நாளன 05-01-2015  திங்கள்கிழமை காலை  ஆலய புனிததீர்த்தகேணியில் தீர்த்தஉத்சவம் இடம்பெற்றது. மாலை திருவூஞ்சல்,கொடியிறக்கம் ,அம்பாள் திருவீதியுலா,சண்டேஸ்வரஉத்சவம் ,ஆச்சாரியஉத்சவம் என்பன இடம்பெற்றது.

படத்தின் மேல் அழுத்தவும் (கிளிக்)செய்வதன் மூலம் படங்களை முழுஅளவில் பார்வையிடலாம்

 

தேர்த்திருவிழா 04-01-2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

 

 

 

8ம் திருவிழா

பகல் மகரவாகனம் மதியம் வேட்டைத்திருவிழா இரவு சப்பரம்

 

6ம்,7ம் திருவிழா காட்சிகள்.

 

no images were found

 02-01-2015  வெள்ளிக்கிழமை புனரமைக்கபட்ட 

தேர் வெள்ளோட்டம் இடம்பெற்றது

அம்பாள் ஆலய தேர் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த போதும் மேல்பகுதி நிறைவு செய்யப்படவில்லை இவ்வருடம் அவ்வேலைகள் நிறைவு செய்யப்பட்டு ,திருத்த வேலைகள் செய்து புனருத்தாரண வெள்ளோட்டம்விடப்பட்டது .

DSC04757 copy

 

5ம்திருவிழா திருமஞச திருவிழா

no images were found

 

2ம்,3ம்,4ம் திருவிழாக்கள்

கொடியேற்றம் – 27-12-2014 சனிக்கிழமைஇடம்பெற்றது

 

 

no images were found

 

Leave a Reply

?>